search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மானசரோவர் யாத்திரை"

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மானசரோவர் புகைப்படங்கள் போலி என்று கூறிய பாரதிய ஜனதா குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி பதிலளித்து சவால் விடுத்துள்ளது. #RahulGandhi #RahulPhotoFaceoff
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார். அங்கு சக பயணிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

    அவை போலியானவை என மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறியுள்ளார். யாத்ரீகர் ஒருவருடன் ராகுல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில், அவர் கையில் வைத்திருக்கும் ஊன்றுகோலின் நிழல் இல்லை எனக்கூறிய அவர், இது போட்டோஷாப் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

    இதைப்போல பா.ஜனதா மகளிரணியின் சமூக ஊடக பொறுப்பாளர் பிரிதி காந்தி, டெல்லி எம்.எல்.ஏ. மஞ்சிந்தர் சிங் ஆகியோரும் ராகுல் காந்தியின் மானசரோவர் புகைப்படங்களை கிண்டல் செய்திருந்தனர்.

    பா.ஜனதாவினரின் இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, கைலாஷ் மலைக்கு முன்னே ராகுல் காந்தி நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் நேற்று வெளியிட்டது. அதனுடன் அவரது மலையேற்ற விவரங்களையும் குறிப்பிட்டு இருந்தது. அதில் 46,333 படிக்கட்டுகள், 203 தளங்கள் அடங்கிய 34.31 கி.மீ. தூரத்தை 463 நிமிடங்களில் கடந்த ராகுல் காந்தி, இதன் மூலம் 4,466 கலோரி கொழுப்பை எரித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

    அத்துடன், ‘கைலாஷ் யாத்திரையின்போது அனைத்து வெறுப்பாளர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேகமாக முன்னேறி சென்றார். உங்களால் முடியுமா?’ என சவாலும் விட்டு உள்ளது. #RahulGandhi #RahulPhotoFaceoff
    நேபாளம் நாட்டில் மானசரோவர் யாத்திரைக்கு சென்ற இந்திய பக்தர் இன்று ஹெலிகாப்டர் விசிறியால் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காத்மாண்டு:

    திபெத் நாட்டில் உள்ள மானசரோவர் ஏரி கடல் மட்டத்திலிருந்து 4590 மீட்டர் உயரத்தில் கைலாய மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி ஆகும்.

    இந்து மதத்தின்படி மானசரோவர் ஏரி பரிசுத்தம் அல்லது தூய்மைக்கு உருவகப்படுத்தப்படுகிறது. இந்த ஏரியின் நீரைப் பருகுபவர் இறப்பிற்குப் பின் சிவபெருமானைச் சென்றடைவர் என்றும், அவர் 100 ஜென்மத்தில் செய்த பாவத்தைப் போக்குவர் என்றும் நம்பப்படுகிறது.

    கைலாய மலையைப் போலவே, மானசரோவர் ஏரியும் புனிதத் தலமாக கருதப்படுகிறது. இந்தியா, நேபாளம், திபெத் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து மக்கள் இவ்விடத்திற்கு வருகின்றனர்.

    இந்த ஏரியில் நீராடினாலும், இதன் நீரைப் பருகினாலும் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. ஏரியைச் சுற்றிப் பார்க்க இந்தியாவில் இருந்து புனிதப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பயணம் 'கைலாச - மானசரோவர் யாத்திரை' என்றும் அழைக்கப்படுகிறது. இந்து, புத்தம் மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த யாத்ரீகர்களும் இப்பயணத்தின் போது இந்த ஏரியில் புனித நீராடி மகிழ்கின்றனர்.


    இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை தொடங்கப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான யாத்திரையை சிக்கிம் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.சி. குப்தா கடந்த ஜூம் மாதம் 15-ம் தேதி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து லிபுலே கணவாய் வழியாகவும், சிக்கிமிலிருந்து நாது லா மாங்த்தி பகுதியில் இருந்து புறப்பட்ட 57 பக்தர்கள் கொண்ட முதல் யாத்ரீகர்கள் குழு, மலைவழியாக நடந்து வந்து கஞ்சி பகுதியில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் 17,500 அடி உயரமுள்ள லிப்புலேக் கணவாய் வழியாக கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி மானசரோவர் புறப்பட்டு சென்றது.

    இதை தொடர்ந்து கடந்த ஒன்றரை மாதமாக பல்லாயிரம் பக்தர்கள் இந்தியாவில் இருந்து மானசரோவர் யாத்திரைக்கு சென்றவண்ணம் உள்ளனர். இங்குள்ள ஹில்ஸா மற்றும் சிம்கோட் பகுதிகளுக்கு இடையில் சாலை வசதிகள் இல்லாததால் சிறிய ஹெலிகாப்டர்களில் சென்று இந்த புனித நதியில் நீராடுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சில யாத்ரீகர்களுடன் இன்று ஹில்ஸா பகுதியில் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அதில் இருந்து கீழே இறங்கிய யாத்ரீகர்களில் ஒருவர் முன்னோக்கி நடந்து செல்வதற்கு பதிலாக பின்னால் நடந்து சென்றார்.

    அப்போது அந்த ஹெலிகாப்டரின் வால் பகுதியில் சுழன்று கொண்டிருந்த விசிறியில் சிக்கிய அவரது தலை துண்டாகிப் போனதால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் உயிரிழந்தார்.

    உயிரிழந்த பக்தர் மும்பையை சேர்ந்த நாகேந்திர குமார் கார்த்திக் மேத்தா(42) என தெரியவந்துள்ள நிலையில், அவரது பிரேதத்தை சிம்கோட் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள நேபாளம் போலீசார், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Mansoravar #Mansoravarpilgrims #Mansoravarpilgrimbeheaded
    நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட தமிழக பக்தர்கள் 16 பேர் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தனர். #Mansarovar #Pilgrims
    சென்னை:

    சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் தலைமையில் 23 பேர் கடந்த மாதம் நேபாள நாட்டில் உள்ள கைலாய மானசரோவர் யாத்திரை சென்றனர்.

    அங்கு பலத்த மழை பெய்ததால் கடுமையான குளிர், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் குழுவாக சென்றவர்கள் பலரும் சிக்கிக் கொண்டனர். இதனால் சென்னையில் இருந்து சென்றவர்கள் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். அவர்களை மத்திய வெளியுறவுத்துறை மீட்க நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி, நங்கநல்லூர் சுப்பிரமணியம் உள்பட 4 பேர் கடந்த மாதம் 30-ந் தேதி சென்னை திரும்பினர். 7 பெண்கள் உள்பட 19 பேரை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், சிறிய ரக விமானங்கள் மூலமாக நேபாள அரசு உதவியுடன் 19 பேர் கொண்ட சென்னை குழுவினர் மீட்கப்பட்டு லக்னோவுக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் தீனதயாளன் உள்பட 3 பேர் டெல்லி சென்றனர். மீதமுள்ள 16 பேர் லக்னோவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை உறவினர்கள் கட்டித் தழுவி உற்சாகமாக வரவேற்றனர். #Mansarovar #Pilgrims
    நேபாளத்தில் மீட்கப்பட்ட தமிழக பக்தர்கள் இன்று சென்னை திரும்புகிறார்கள் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நேபாளம்-திபெத் எல்லையில் உள்ள மானசரோவருக்கு யாத்திரை சென்று நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் மீட்கப்பட்டது பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று பேசியதாவது:-

    இமயமலையில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில், நாடு முழுவதிலிருந்தும் பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர்.

    இந்தியாவிலிருந்து புனித யாத்திரை சென்றவர்கள், அங்கு நிலவும் மோசமான பருவநிலை காரணமாக, 629 பேர் சிமிகோட் என்ற இடத்திலும், 451 பேர் ஹில்சா என்ற இடத்திலும், மேலும் 500 பேர் சீனாவின் திபெத் எல்லையிலும் சிக்கியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானவுடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த யாத்திரிகர் அங்குள்ளனரா என கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.

    இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலிருந்து புனித யாத்திரை சென்றவர்களின் நிலை குறித்து, தமிழ்நாடு அரசு அதிகாரிகள், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு, விவரங்கள் கேட்டறிந்தனர்.

    சென்னையிலிருந்து 19 பேர் கொண்ட குழுவினர், நேபாளத்தில் சிமிகோட் பகுதியில் இருப்பதாகவும், அவர்கள் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல் பெறப்பட்டது. நேற்று பருவநிலை மேம்பட்ட காரணத்தால், சிமிகோட் பகுதியிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 யாத்திரிகர்கள் நேபாள்கஞ்ச் என்ற இடத்திற்கு விமானம் மூலம் வந்தடைந்தனர்.



    அங்கிருந்து யாத்திரிகர்களை தமிழ்நாட்டிற்கு உரிய முறையில் அனுப்பி வைப்பதற்கு, புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்திலிருந்து இரண்டு அதிகாரிகளை நேபாள்கஞ்ச் செல்ல நான் உத்தரவிட்டேன். அவர்கள், இந்திய தூதரகம் மற்றும் நேபாள அரசின் ஒத்துழைப்போடு, நம் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து யாத்திரிகர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இக்குழுவைச் சார்ந்த 18 பேர் இன்று காலை லக்னோ வந்தடைந்துள்ளனர். இக்குழுவைச் சார்ந்த மற்றொரு நபர் இன்று மாலைக்குள் லக்னோ வந்தடைவார். இவர்கள் அனைவரும் இன்று இரவு சென்னைக்கு வந்தடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து நான்கு பேர் யாத்திரை சென்றுள்ளனர். அவர்கள் நேற்று சிமிகோட் பகுதிக்கு திரும்பியுள்ளனர். அவர்களை, நேபாள் கஞ்ச் வழியாக இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இது தவிர, தேனி மாவட்டத்திலிருந்து தனியே சென்ற 6 பேர் கொண்ட குழுவில், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த 69 வயதான ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், புனித யாத்திரை செல்லும் வழியில், உடல்நிலை காரணமாக யாத்திரையை முடிக்க முடியாமல் திரும்பி வரும்போது, மூச்சுத் திணறி இறந்ததாக தகவல் பெறப்பட்டது.

    தற்போது அவரது உடல் நேபாள தலைநகர் காட்மண்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தகவல் தெரிந்த அவரது மகனும், மகளும் அங்கே சென்றுள்ளனர். அவரது உடலை இன்று அல்லது நாளைக்குள் அவரது சொந்த ஊருக்கு எடுத்துவர, நேபாள நாட்டின் காட்மண்டுவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    நேபாள நாட்டிற்கு, தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள அனைத்து யாத்திரிகர்களும் பாதுகாப்பாக அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அம்மாவின் அரசு எடுத்து வருகிறது என்பதை இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy #MansarovarYatra
    நேபாள நாட்டில் கைலாச புனித யாத்திரைக்கு சென்ற கேரள பெண் மூச்சு திணறி உயிரிழந்தார். #MansarovarYatra
    திருவனந்தபுரம்:

    இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்ற பக்தர்கள் மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.

    கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு சென்றனர். இவர்களில் மலப்புரம் மாவட்டம் வந்தூர் பகுதியைச் சேர்ந்த லீமாமகேந்திர நாராயணன்(வயது56) என்பவரும் ஒருவர். இவர் புனித தலங்களை பார்த்து விட்டு கேரளா திரும்ப திட்டமிட்டார். இந்நிலையில் நேபாளத்தின் சிமிகோட் என்ற இடத்தில் வைத்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் அவர் உயிர் இழந்து விட்டார்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிராண வாய்வு குறைபாடு காரணமாக லீமாமகேந்திர நாராயணன் உயிர் இழந்ததாக தெரிவித்தனர். தற்போது அவரது உடல் சிமிகோட் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாகவே மோசமான வானிலை காரணமாக அங்கிருந்து விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக அவரது உடலை கேரளா கொண்டுச் செல்வதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். #MansarovarYatra #IndiansStrandedInNepal
    நேபாளம் வெள்ளத்தில் சிக்கிய 23 பேரும் உடுக்க உடை இல்லாமல் 8 நாளாக தவித்து வருவதாக வில்லிவாக்கம் பக்தர் தீனதயாளன் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். #MansarovarYatra #IndiansStrandedInNepal
    சென்னை:

    நேபாளத்தில் தவிக்கும் 23 பேரில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தீனதயாளனும் ஒருவர். இவர் அங்கிருந்தபடியே செல்போனில் அளித்த பேட்டி வருமாறு:-

    நேபாளத்தில் சிமி கோட் பகுதியில் சென்னையை சேர்ந்தவர்கள் ஒரு இடத்தில் தங்கி இருக்கிறோம். கடந்த 5 நாட்களாக இங்கு சாலையோர கடைகளில் ஒரே அறையில் அனைவரும் படுத்துள்ளோம்.



    8 நாட்களுக்கும் மேலாக ஒரே உடையைதான் நாங்கள் அணிந்துள்ளோம். மாற்று உடை கூட எங்களிடம் இல்லை. இந்தியாவை சேர்ந்த சுமார் 100 பேர் இதே போன்று தவித்து வருகிறார்கள். நேபாளத்தில் மோசமான வானிலை காணப்படுகிறது.

    எனவே அங்கிருந்து எங்களை பத்திரமாக பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இதே நிலை நீடித்தால் நாங்கள் மேலும் பாதிப்புக்குள்ளாவோம். எனவே உடனடியாக நாங்கள் இங்கிருந்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே நேபாளத்தில் தவிக்கும் 23 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘நேபாளத்தில் தவிப்பவர்கள் பத்திரமாக உள்ளனர்’’ என்று தெரிவித்தார். #MansarovarYatra #IndiansStrandedInNepal

    சென்னையில் இருந்து கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை சென்ற 19 பேர் கனமழையின் காரணமாக நேபாளத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.
    சென்னை:

    இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் நேபாள நாட்டின் வழியாக புனித யாத்திரை செல்கிறார்கள். நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது.

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 1,300 பக்தர்களில் பெரும்பாலானோர் சிமிகோட் என்ற இடத்தில் மழையில் சிக்கி தவிக்கிறார்கள். மழையின் காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னையில் இருந்து கடந்த மாதம் 20-ந் தேதி கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற 23 பேரில் 4 பேர் கடந்த 30-ந் தேதி சென்னை திரும்பி விட்டனர். தீனதயாளன் என்பவர் உள்பட மற்ற 19 பேர் அங்கு மழை மற்றும் கடும் குளிரில் சிக்கி, ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களில் முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவியும் ஒருவர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    சீனா-நேபாளம் எல்லையில் உள்ள ஹில்சா என்ற இடத்தில் தாங்கள் சிக்கி தவிப்பதாகவும், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    சுமார் 400 பேர் காட்மாண்டு விமானநிலையத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.

    யாத்திரை சென்று சிக்கி தவிப்பவர்களில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 290 பக்தர்களும் உள்ளனர். தொடர்ந்து மழை பெய்வதாலும், பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாலும் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

    சென்னையில் இருந்து ஏற்கனவே அங்கு யாத்திரை சென்ற குழுவில் இடம் பெற்று இருந்த சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதேபோல் கேரளாவைச் சேர்ந்த லீலா மகேந்திர நாராயணன் (வயது 56) என்பவர் சிமிகோட்டில் இறந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    தமிழக பக்தர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். 
    மானசரோவர் யாத்திரையின் முதல் குழுவில் இடம்பெற்றுள்ள 57 பக்தர்கள் இன்று காலை லிப்புலேக் கணவாய் வழியாக புறப்பட்டுச் சென்றனர். #Mansoravar #Mansoravarpilgrims
    பித்தோராகர்:

    திபெத் நாட்டில் உள்ள மானசரோவர் ஏரி கடல் மட்டத்திலிருந்து 4590 மீட்டர் உயரத்தில் கயிலாய மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி ஆகும்.

    மானசரோவர் பரிக்ரமம் வரும்போது சுகு, ஜெய்தி ஆகிய இரண்டு இடங்களிலும் கயிலாய மலையின் பிரதிபிம்பத்தை மானசரோவரில் காண முடியும். இது ஓர் அரிய காட்சியாகும். இந்தப் பிரதிபிம்பம் ‘சிவமும் சக்தியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம்’ என்ற கருத்தில் ‘கெளரி சங்கர்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குளம் 51 சக்தி பீடங்களில் தேவியின் வலது உள்ளங்கை விழுந்த பீடமாகும்.

    மானசரோவர் ஏரியிலிருந்து சத்லஜ் ஆறு, பிரம்மபுத்திரா ஆறு, சிந்து ஆறு போன்ற முக்கிய ஆறுகள் உற்பத்தியாகிறது.

    இந்து மதத்தின்படி மானசரோவர் ஏரி பரிசுத்தம் அல்லது தூய்மைக்கு உருவகப்படுத்தப்படுகிறது. இந்த ஏரியின் நீரைப் பருகுபவர் இறப்பிற்குப் பின் சிவபெருமானைச் சென்றடைவர் என்றும், அவர் 100 ஜென்மத்தில் செய்த பாவத்தைப் போக்குவர் என்றும் நம்பப்படுகிறது. கயிலாய மலையைப் போலவே, மானசரோவர் ஏரியும் புனிதத் தலமாக கருதப்படுகிறது. இந்தியா, நேபாளம், திபெத் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து மக்கள் இவ்விடத்திற்கு வருகின்றனர்.

    இந்த ஏரியில் நீராடினாலும், இதன் நீரைப் பருகினாலும் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. ஏரியைச் சுற்றிப் பார்க்க இந்தியாவில் இருந்து புனிதப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பயணம் 'கைலாச - மானசரோவர் யாத்திரை' என்றும் அழைக்கப்படுகிறது. இப்பயணத்தின் போது யாத்ரீகர்கள் இந்த ஏரியில் புனித நீராடி மகிழ்கின்றனர்.

    மானசரோவர் ஏரியானது பல காலங்களுக்கு முன்பாகவே ஆசிய நதிகளான பிரம்மபுத்திரா, காகரா, சிந்து மற்றும் சட்லெஜ் ஆகியவற்றின் மூலமாக யாத்ரீகர்களால் கருதப்பட்டது. எனவே யாத்ரீகர்கள் இவ்விடத்தை மையப்பகுதியாக் கொண்டு ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கே வந்து சென்று கொண்டிருக்கின்றனர். சாம்டோ போருக்குப்பின், இப்பகுதியானது யாத்ரீகர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 1951-லிருந்து 1981-ம் ஆண்டுவரை வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. 1980-க்குப் பிறகு மறுபடியும் இந்திய யாத்ரீகர்களின் காலடிச் சுவடுகள் மானசரோவரில் பதியத் தொடங்கின.



    இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை தொடங்கப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான யாத்திரையை சிக்கிம் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.சி. குப்தா கடந்த 15-ம் தேதி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து லிபுலே கணவாய் வழியாகவும், சிக்கிமிலிருந்து நாது லா கணவாய் வழியாகவும் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. நாது லா கணவாய் வழியாகச் செல்வதற்கு கடந்த ஆண்டு சீன அரசு தடைவிதித்தது. டோக்லாம் எல்லை பிரச்சினை காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

    டோக்லாம் பிரச்சினை தீர்ந்துள்ளதால் இந்த ஆண்டில் மீண்டும் நாதுலா கணவாய் வழியாக யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

    இந்நிலையில், மாங்த்தி பகுதியில் இருந்து புறப்பட்ட 57 பக்தர்கள் கொண்ட முதல் யாத்ரீகர்கள் குழு, மலைவழியாக நடந்து வந்து கஞ்சி பகுதியில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் 17,500 அடி உயரமுள்ள லிப்புலேக் கணவாய் வழியாக இன்று மானசரோவர் புறப்பட்டு சென்றது. #Mansoravar #Mansoravarpilgrims #Firstbatch
     
    ×